புதன், 31 அக்டோபர், 2012
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
பெண்மையின் பேரின்பம்
பெண்மையின் பேரின்பம்
நாள்பார்த்து நல்ல நேரம் பார்த்து
நல்லோர்கள் வாழ்த்து நல் சொல்ல
பார்த்து பேசி இருவீட்டாரும்-மகிழ்ந்து
சேர்த்து வைத்த திருமணம் சிறப்பாக
தாலி கட்டியதும் தவம் ஆரம்பம்
தனியறையில் நாளும் ஏற்படும்
பூகம்பம்
தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை
தாகமது மட்டும் தணியும் முடியும்!
கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை
கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல்
சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில்
சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்!
அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி
அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள்
வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை
பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்!
பிறக்குமுன்னே பிள்ளை செய்யும்
சேட்டையை
பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள்
பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே
இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்!
நல்லோரின் நல் ஆசியுடன் பெயரை
எல்லோர் நினைவில் சொல்லி வைத்து
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி-குழந்தைக்கு
எல்லோரும் கூடி தாயை-சேயை வாழ்த்துவார்கள்
Posted by
கவியாழி கண்ணதாசன் thanks
முதல்நாள் இரவு
இரவெல்லாம் விழித்திருந்து
இமை மூடா தவமிருந்து
ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய்
உற்றாரின் நலம் பகிர்ந்து
விளக்கு தோரணம்
விடியும்வரை எரிந்தும்
நலுங்கு நாட்டியமும்-கச்சேரி
நாளெல்லாம் பெரு விருந்தாய்
விடியும்முன் எழுந்து
விமரிசையான சடங்குகளுடன்
காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி
மாலை மாற்றி மகிழ்ந்தேன்
தாலிகட்டி தவம் கலைத்தேன்
தைரியமாய் அருகில் அமர்ந்தேன்
நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான
நலபாகத்துடன் விருந்து படைத்து
சேலைமாற்றி சிவந்த முகத்துடன்
சொம்பில் பாலுடன் நடந்தேன்
மாலை அணிந்து மங்கலமாய்-நாணமாய்
ஆளை பார்த்தேன் ஆர்வமாய்
தோளை பிடித்து தொட்டதும்
துவண்டு விழுந்தேன் சரிந்தேன்
துணிகளை இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும்
தொடங்கி மீண்டும் மகிழ்ந்தேன்
Posted by
கவியாழி கண்ணதாசன் thanks
வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு
தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும்
துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு
நாட்களை கடத்தி நமக்கென்ன பயன்
நாமிங்கு இணைவதால் என்ன பிழை
பூக்களை போல் நீ வாடுவதை- புரிந்தும்
ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே
தூங்கி எழுந்ததும் துணை தேடிடும்
ஏங்கி இழந்ததை நாடிடும் இன்பம்
தாங்கித்தான் இருப்பேனே துணையாக-என்றும்
பாங்கி உன்னை பார்த்திடுவேன் நலமாக
நிலவுக்குள் நாம் நடந்தால் நிம்மதி
நேரம் செல்லும் முன்னே சொல்லடி
ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை
தூரம் அதிகமில்லை துணிந்து நில்லடி
நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும்
உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும்
கனவு மீண்டும் உன்னை துரத்தி- இறுதி
காலம் முடியுமுன் ஆசையை நிறுத்தி
உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார்
சொல்லென சொல்லி சிதைத்துடுவார்
நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி
இல்லறமாக கிடைக்க நான் ஏங்குகிறேன்
kaviyazhi.blogspot thanks
செவ்வாய், 9 அக்டோபர், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)