Saturday, April 3, 2010
Sunday, March 28, 2010
இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!
உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்..
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும்
உந்தன் நினைவுகள்..!
இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்..
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும்
உந்தன் நினைவுகள்..!
இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!
Tuesday, March 23, 2010
Sunday, March 14, 2010
Sunday, March 7, 2010
எங்கள் வீட்டு திருமணம்...... !!
கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!
உனக்காய் பிறந்த முறை மாமன்,
உறைசேரும் எங்கள் குலமகளே..
வள்ளுவன் வகுத்த வழியில்
நல்லறம் பேணி இல்லறம் சிறக்க
செய்வாயாக....!!
Monday, February 15, 2010
Sunday, February 14, 2010
Thursday, February 11, 2010
படையெடு இன்றே..!!
வானப்படையின் மேகப்
போர்வீரனே..
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி
அகற்ற..!
ஆயிரம் படை கண்டேன் - அவர்தம்
ஆயிரம் கொடி கண்டேன்
எவரதும் இல்லை உன்போல்
ஏழு வண்ணத்தில்..!!
உயிர் உறையும் போர்க்களம்
ஆயிரம்
கண்டதுண்டு..!
பயிர் விளையும்
போர்க்களம்
உன் களம் மட்டுமே..!
உன் களம் மட்டுமே..!
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!காதல்..! ஒரு கனவு..!?
காதல் ஒரு கனவு
என்கிறார்களே..?
கனவுகள் என்ன கதவை
தட்டி விட்டா வருகிறது ..?
காதலும் அப்படித் தானே
வருகிறது..!
அப்போ அவர்கள் சொல்வது
உண்மை தான்..
ச்சே... ச்சே..
அப்படியெல்லாம் இருக்காது...
அட....
கண்களின் உறக்கத்தில்
பிறந்து
மறைவதன்றோ கனவு
..!
கண்களின் நெருக்கத்தில்
நுழைந்து
உறைவதன்றோ
காதல்..!
அட..
போங்கப்பா...
காதலும் கனவும் வேறு
வேறுதான்..!
Tuesday, February 2, 2010
Friday, January 29, 2010
Thursday, January 21, 2010
உழவன் இன்றி உலகேது..!! (தை 2010)
நீ விழி மறந்து, வலி
சுமந்து..
வியர்வை விருந்திட்டு
வளர்த்திட்ட
நெற்பயிரின் வனப்பு
கண்டு..
வாய்பிளந்து பொழிகிறது
வான் மேகம்..!!
மலை மறைவில் மறைய
மறுக்கிறது,
மயக்கத்தில் தினம் மாலை
சூரியன்..!!
மண்ணில் நீ
விதைத்திட்டாலும்,
கண் எனும் கற்ப பையில்
அன்றோ வளர்த்திட்டாய்..!!
ஒவ்வொரு விதையிலும்
ஓராயிரம் உயிர் உருவாக்கி..
மண்ணிலும் முத்தெடுக்கும்
வித்தையை
உன்னிடத்திலன்றோ இனி
பிரம்மனும் கற்று கொள்ள வேண்டும் ..!!
உழைப்பை உருக்கியன்றோ
அறுவடையை உரித்தாக்கினாய்
உழைக்கும் முன்னே
உருகிபோயிருக்கும்
உன்னிடத்தில் மெழுகு
இருந்திருந்தால்..!!
அப்ப கூட வரல..!
கை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!
நான் நடை பழகுவதிலிருந்து...
உடை பழகும் வரை கை கொடுத்தார் அப்பா... அப்ப கூட
வரல..!
தினம் நூறு பொய் சொல்லி
நண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!
ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை
குடுத்தேன்..
உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!
இப்போ வந்திருச்சு...
அடுத்து நான் இறங்கும் முன்
அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!
இப்போ என்னாச்சு எனக்கு...??
சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!!
நாளை வரை வரமாட்டாய்
தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே
நிற்கிறது..
நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்...
எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது...
நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா
என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...
நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில்
மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை
மறந்து...