Listen 3D Quality

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு









வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு
தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும்
துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு

நாட்களை கடத்தி நமக்கென்ன பயன்
நாமிங்கு இணைவதால் என்ன பிழை
பூக்களை போல்  நீ வாடுவதை- புரிந்தும்
ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே

தூங்கி எழுந்ததும் துணை தேடிடும்
ஏங்கி  இழந்ததை நாடிடும் இன்பம்
தாங்கித்தான் இருப்பேனே  துணையாக-என்றும்
பாங்கி உன்னை பார்த்திடுவேன்  நலமாக

நிலவுக்குள்  நாம் நடந்தால் நிம்மதி
நேரம் செல்லும் முன்னே சொல்லடி
ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை
தூரம் அதிகமில்லை  துணிந்து நில்லடி

நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும்
உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும்
கனவு  மீண்டும் உன்னை துரத்தி- இறுதி
காலம் முடியுமுன் ஆசையை  நிறுத்தி

உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார்
சொல்லென சொல்லி  சிதைத்துடுவார்
நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி
இல்லறமாக கிடைக்க  நான் ஏங்குகிறேன்

kaviyazhi.blogspot thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக