Listen 3D Quality

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

முதல்நாள் இரவு







 இரவெல்லாம் விழித்திருந்து
இமை மூடா தவமிருந்து

ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய்
உற்றாரின் நலம் பகிர்ந்து

விளக்கு தோரணம்
விடியும்வரை  எரிந்தும்

நலுங்கு நாட்டியமும்-கச்சேரி
நாளெல்லாம்  பெரு விருந்தாய்

விடியும்முன் எழுந்து
விமரிசையான சடங்குகளுடன்

காலை கதிரவனை கைகூப்பி-வணங்கி
மாலை மாற்றி  மகிழ்ந்தேன்

தாலிகட்டி தவம் கலைத்தேன்
தைரியமாய் அருகில் அமர்ந்தேன்

நாளை குறித்து நல்பழங்களுடன்-சத்தான
நலபாகத்துடன் விருந்து படைத்து

சேலைமாற்றி சிவந்த முகத்துடன்
சொம்பில் பாலுடன் நடந்தேன்

மாலை அணிந்து  மங்கலமாய்-நாணமாய்
ஆளை பார்த்தேன்  ஆர்வமாய்

தோளை பிடித்து தொட்டதும்
துவண்டு விழுந்தேன் சரிந்தேன்
துணிகளை  இழந்தேன் மகிழ்ந்தேன்-மீண்டும்
தொடங்கி  மீண்டும் மகிழ்ந்தேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக