Listen 3D Quality

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

பெண்மையின் பேரின்பம்


பெண்மையின் பேரின்பம்










      
நாள்பார்த்து நல்ல நேரம் பார்த்து
நல்லோர்கள் வாழ்த்து நல் சொல்ல
பார்த்து பேசி இருவீட்டாரும்-மகிழ்ந்து
சேர்த்து வைத்த திருமணம் சிறப்பாக

தாலி கட்டியதும் தவம் ஆரம்பம்
தனியறையில் நாளும்  ஏற்படும் பூகம்பம்
தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை
தாகமது மட்டும் தணியும் முடியும்!

கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை
கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல்
சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில்
சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்!

அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி
அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள்
வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை
பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்!


பிறக்குமுன்னே பிள்ளை  செய்யும் சேட்டையை
பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள்
பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே
இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்!

நல்லோரின் நல் ஆசியுடன் பெயரை
எல்லோர் நினைவில் சொல்லி வைத்து
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி-குழந்தைக்கு
எல்லோரும் கூடி தாயை-சேயை வாழ்த்துவார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக