Listen 3D Quality

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

என்னடா உலகமிது... Repost


என்னடா உலகமிது... Repost




கிழிந்த சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!
ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!
பட்டு சட்டை போட்டவன்
கைக்குட்டை கேட்டான்
மலைபோல் குவித்து
காட்டினான் அவனுக்கு...!

நான் எடுத்து வந்தேன்
அவன் மறுத்து சென்றான்..

sakthistudycentre thanks

செவ்வாய், 15 ஜனவரி, 2013

கூட்டு சேர்ப்பதில்லை


ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தளத்திலுள்ள கவிதைகள்

தளத்திலுள்ள கவிதைகள்
1 காதலே உன்னை என்ன செய்ய - றஞ்சினி
2 உறவு ஒன்று புதிதாய் உருவாகும் - கத்துக்குட்டி
3 ஏய் மனிதா - எதிக்கா
4 தழைப்பாய் நீயும் ஓர் நாள் - சுப்பிரமணியன் ரமேஸ்
5 அந்த வாழ்க்கை - புஸ்பா கிறிஸ்ரி
6 அர்த்தமற்ற வார்த்தை - இ.இசாக்
7 மின்னலாய் ஒரு - நிர்வாணி
8 என் கண்களில் - சந்திரவதனா
9 என் நெஞ்சோ - தாஸ்
10 மரபுகளை முறித்து - நிர்வாணி
11 எனது மலையுச்சி மனிதன் - ரவி (சுவிஸ்)
12 என் டெஸ்க்டாப் - துளசி
13 எங்களின் தேசம் - நிர்வாணி
14 எங்கேனும் ஒரு மூலையில் - கே.ஆர்.விஜய்
15 எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ? - நிர்வாணி
16 நட்பு - முஜிமைந்தன்
17 எதையோ தேடி எதையோ பெற்று - நிர்வாணி
18 ஏதோ ஓர் மனிதம் - நிர்வாணி
19 எண்ணித் துணிக - புஸ்பா கிறிஸ்ரி
20 இலவு காத்த கிளிகள் - சந்திரவதனா
21 இன்னும் எத்தனை காலம் - நிர்வாணி
22 இன்னுந்தான் - சி.வ.வரதராஜன்
23 இன்று என் உடலுக்கு - நிர்வாணி
24 இருப்பின் அடையாளம் - சந்திரபோஸ் சுதாகர்
25 இதயத்தின் மெல்லிய அதிர்வுகள் - இளங்கோ
26 இது உண்மை - நிர்வாணி
27 இது யார் செய்த பாவமோ ? - புஸ்பா கிறிஸ்ரி
28 இயற்கை - இ.இசாக்
29 இனியேனும் - கருணாளினி.தெ
30 ஜனனத்தில் தோன்றி மரணத்தில் - எதிக்கா
31 காலம் - புஸ்பா கிறிஸ்ரி
32 கண்மணியே - நிர்வாணி
33 கண்ணே நானும் நீயும் - மாலியன்
34 கண்திருஸ்டி வினாயகர் - கவியோகி வேதம்
35 இன்னமும் பசுமையாய் உள்ளத்தில் - நிர்வாணி
36 காதலே ! - நிர்வாணி
37 எது கவிதை ? - நிர்வாணி
38 கோடையும் நானும் - மாலியன்
39 கோணல் மனசு - இ.இசாக்
40 கூதலும் கூடிய குளிர் காலம் - எதிக்கா
41 குளிர் - சந்திரவதனா
42 மாவீரர்களே ! - நிர்வாணி
43 மாவுக் கட்டு - சகாரா
44 மனிதன் - எதிக்கா
45 மனிதனாதல் - மாலியன்
46 மரநாய் - கற்சுறா
47 மயானத்து மரங்கள் - புஸ்பா கிறிஸ்ரி
48 மௌனம் - முத்து கிருஸ்ணன்
49 முகம் கிழித்து இன்னொன்று - நிர்வாணி
50 முன்பெல்லாம் கொஞ்சலும் கெஞ்சலும் - எதிக்கா

திங்கள், 10 டிசம்பர், 2012

ஒற்றை பனித்துளி..!


Saturday, April 3, 2010

ஒற்றை பனித்துளி..!

Posted by Yellem Lm On Saturday, April 03, 2010 2 comments





உருகிய பின்னும்
இன்னும் உதிராமல்
உனக்காய் காத்திருக்கும்
ஒற்றை பனித்துளி..!

Sunday, March 28, 2010

இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!

Posted by Yellem Lm On Sunday, March 28, 2010 4 comments

 
உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
 
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்.. 
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும் 
உந்தன் நினைவுகள்..!


இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!

    தண்ணீரில் விழுந்த தாமரை..!!

    Posted by Yellem Lm On Sunday, March 28, 2010 5 comments



    தண்ணீரில் தவறி விழுந்த
    தாமரை இதழாய் நித்தம் தவிக்கிறேன்
    ஒட்டி உறவாடவும் இல்லை..
    விட்டு விலகவும் இல்லை..
    முட்டி மோதுகிறேன்,
    உன் நினைவுகளோடு...!!

    மௌனமாய் கொலுசு..!!

    Posted by Yellem Lm On Sunday, March 28, 2010 4 comments

      
    கொலுசும்..கொஞ்ச நேரம் 
    மௌனமாய் ரசிக்கிறது 
    நீ சிணுங்குவதை..!

    தாமரையும்..
    நீச்சலை மறந்து தண்ணீரில்
    தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது
    நீ கடக்கும் போது..!
      
    பிரம்மனும்..
    புன்னகைக்கு புது விலாசத்தை
    உன் இதழ் அசைவில் அஞ்சலாய்
    அனுப்பி உள்ளான் போலும் ..!

    Tuesday, March 23, 2010

    இதய தேர்தல்..!!

    Posted by Yellem Lm On Tuesday, March 23, 2010 3 comments

     
    என் உயிரின் உயிரான
    வாக்காளப் பெரும(க்)களே..
    உங்கள் இதய தொகுதியில்
    போட்டியிடும் எனக்கு
    உங்களின்...
    இதய வா(ழ்)க்கை அளிக்குமாறு
    உங்கள் இருத(ய)(ட)ம்
    தொட்டு கேட்டுக்  கொள்கிறேன்..!!

    Sunday, March 14, 2010

    விழியோரமாய் விசித்திர வீரன்...!!

    Posted by Yellem Lm On Sunday, March 14, 2010 3 comments

    உன்னை படைத்த ஆண்டவனை விட
    நான் அதிகமாய் வியப்பது..
    உந்தன் இமைகளை தான்..!!
    பிறகென்ன கொஞ்சம் கூட பயமில்லாமல்,
    அட கொஞ்சமும் சலனமும் இன்றி...
    எவ்வளவு சகஜமாய்...
    விழிகளோடு ஒட்டி உறவாடுகிறது ..!!


    Sunday, March 7, 2010

    எங்கள் வீட்டு திருமணம்...... !!

    Posted by Yellem Lm On Sunday, March 07, 2010 4 comments


    புதுமணம் புரியும் பூமகளே, உன்
    ஓர விழியோரம் ஒதுங்கும் குறுநகைக்கு
    விலங்கிட இனி வேலையில்லை..!!

    கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
    பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
    பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!


    உனக்காய் பிறந்த முறை மாமன்,
    உறைசேரும் எங்கள் குலமகளே..
    வள்ளுவன் வகுத்த வழியில் 
    நல்லறம் பேணி இல்லறம் சிறக்க செய்வாயாக....!!

    Monday, February 15, 2010

    நீ இல்லாத குறை..!!

    Posted by Yellem Lm On Monday, February 15, 2010 1 comment

    தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
    ஆளே இல்லாத அறை...
    அங்கேயும் நிறைந்தே  நிற்கிறது.. 
    நீ இல்லாத குறை..!!

    நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
    எனக்கோ மொத்தமாய் இழந்த 
    இதயம் போல் வலிக்கிறது
    நாளை வரை வரமாட்டாய் எனும் போது..!

    Sunday, February 14, 2010

    காதலா..!! காமமா..??

    Posted by Yellem Lm On Sunday, February 14, 2010 2 comments

    காரிருள் அள்ளிச் சூடிய

    காலை கதிரவனின் 

    கன்னிப் பார்வையில்

    கண் மலர்ந்து

    தனை மறந்து

    உருகி... உயிர்விடும்


    பனித்துளி....!

    காதலா..!! காமமா..??

    கனவில் கதவை திறக்கிறேன் ..!

    Posted by Yellem Lm On Sunday, February 14, 2010 2 comments

    கண்ணே..
    நீ பார்க்கும் போது
    நான் குருடனாகிறேன்..!
    நீ பேசும் போது
    நான் ஊமையாகிறேன்..!
    நீ சிரிக்கும் போது
    நான் கண் சிமிட்டவும் கூட
    மறந்து விடுகிறேன்..!
    அட...
    நீ கனவில் வந்தால் கூட
    கதவை திறக்கிறேன்
    இதயத்தில் இடமளிக்க..!

    Thursday, February 11, 2010

    இருவருக்குமாய் ஒரு கூட்டணி..!!

    Posted by Yellem Lm On Thursday, February 11, 2010 2 comments

    அன்பே..
    யார் யாரோ கூட்டணி  அமைக்கிறார்கள்
    நாமும் அமைத்தால் என்ன..??
    வா நாமும் அமைப்போம்.... இனிதாய்..
    வாழ்க்கை தேர்தலில்
    இதய தொகுதியில்
    காதல் சின்னத்தில் போட்டியிடுவோம்
    நான் மட்டுமே வேட்பாளர்..!!.
    இன்னுமா சந்தேகம்....??
    நீ மட்டுமே வாக்காளர்..!!

    படையெடு இன்றே..!!

    Posted by Yellem Lm On Thursday, February 11, 2010 1 comment


    வானவில் கொடி ஏந்தும்
    வானப்படையின் மேகப் போர்வீரனே..
    படையெடு இன்றே
    பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!

    ஆயிரம் படை கண்டேன் - அவர்தம்
    ஆயிரம் கொடி கண்டேன்
    எவரதும் இல்லை உன்போல்
    ஏழு வண்ணத்தில்..!!

    உயிர் உறையும் போர்க்களம்
    ஆயிரம் கண்டதுண்டு..!
    பயிர் விளையும் போர்க்களம் 
    உன் களம் மட்டுமே..!
    படையெடு இன்றே
    பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!


    மனம் மலரும் மண விழா..!!

    Posted by Yellem Lm On Thursday, February 11, 2010 1 comment


    இன்றே காதல் கொண்டு வண்ணமாக்கிடுங்கள் 
    பாசப் புள்ளியில்
    நேசக் கோடிட்ட
    புது வாழ்க்கை கோலத்தை...!!

    வண்ண பூக்களின் வாசனையோடு
    வண்ணத்து பூச்சியின் யோசனையோடு
    வான்முகில் தோரண வழியில்...
    ...
    தொடரும் இந்த இனிய பயணம்
    இருவர் பயணம் ஆயினும்
    இட்டு செல்லுங்கள் 
    ஒருவர் காலடியை மட்டும்...!!


    காதல்..! ஒரு கனவு..!?

    Posted by Yellem Lm On Thursday, February 11, 2010 1 comment

    காதல் ஒரு கனவு என்கிறார்களே..?
    அட.. ஆமாம் ..!
    கனவுகள் என்ன கதவை தட்டி விட்டா வருகிறது ..?
    காதலும் அப்படித் தானே வருகிறது..!

    அப்போ அவர்கள் சொல்வது உண்மை தான்..
    ச்சே... ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது...

    அட....
    கண்களின் உறக்கத்தில் பிறந்து
    மறைவதன்றோ கனவு ..!
    ஆனால்
    கண்களின் நெருக்கத்தில் நுழைந்து
    உறைவதன்றோ காதல்..!

    அட.. போங்கப்பா...
    காதலும் கனவும் வேறு வேறுதான்..!

    Tuesday, February 2, 2010

    நிலவுக்கு நல்ல நேரம் ..!!

    Posted by Yellem Lm On Tuesday, February 02, 2010 2 comments

    அன்று ஒரு நாள் ..
    என்னவள் அமாவாசை நாளில்
    நிலவை தேடி கொண்டிருந்தாள்..!
    நல்ல வேளை நிலவுக்கு அன்று
    நல்ல நேரம் போலும்..!
    இல்லையேல்.... அய்யகோ ..
    அவளின் காந்தப் பார்வையில்
    சாந்தமான அந்த.. வெண்மதியும்
    வெம்மையாயிருக்கும்..!!


    உழவர் பெருமை...!! (2009)

    Posted by Yellem Lm On Tuesday, February 02, 2010 2 comments

    வானம் பார்த்த எம் பூமியின்
    மானம் காத்த எம் உழவா..!
    வழி தவறிய மேகங்கள்
    வழியில் தொலைத்த சில துளிகளோடு
    உன் துளி தந்து..
    உதிரத்தையன்றோ உரமாக்கினாய்..!
    ஆயிரமாயிரம் நெல் மணிகளை
    உருவாக்கி கருவாக்கிய தாயல்லவா நீ..!
    உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..
    உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!
    அன்பன் முனி...

    Friday, January 29, 2010

    6yhb

    Posted by Yellem Lm On Friday, January 29, 2010 No comments


    பிரம்மன் பிதற்றுகிறான்...!!

    Posted by Yellem Lm On Friday, January 29, 2010 2 comments

    காதல் போதையில் கச்சிதமாய்
    கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...
    பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...
    நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு
    நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே...!!

    Thursday, January 21, 2010

    பைத்தியகாரர்கள்..!!

    Posted by Yellem Lm On Thursday, January 21, 2010 1 comment

    பைத்தியகாரர்கள்
    அப்புறம் என்ன..
    உன்னை பார்த்த பின்னும்
    அழகி போட்டி நடத்துகிறார்களே.......!!

    உழவன் இன்றி உலகேது..!! (தை 2010)

    Posted by Yellem Lm On Thursday, January 21, 2010 2 comments

    உழவா..!
    நீ விழி மறந்து, வலி சுமந்து..
    வியர்வை விருந்திட்டு வளர்த்திட்ட
    நெற்பயிரின்  வனப்பு கண்டு..
    வாய்பிளந்து பொழிகிறது  வான் மேகம்..!!

    மலை மறைவில் மறைய மறுக்கிறது,
    மயக்கத்தில் தினம் மாலை சூரியன்..!!

    மண்ணில் நீ விதைத்திட்டாலும்,
    கண் எனும் கற்ப பையில் அன்றோ வளர்த்திட்டாய்..!!

    ஒவ்வொரு விதையிலும் ஓராயிரம் உயிர் உருவாக்கி..
    மண்ணிலும் முத்தெடுக்கும் வித்தையை
    உன்னிடத்திலன்றோ இனி பிரம்மனும் கற்று கொள்ள வேண்டும் ..!!

    உழைப்பை உருக்கியன்றோ அறுவடையை உரித்தாக்கினாய்
    உழைக்கும் முன்னே உருகிபோயிருக்கும் 
    உன்னிடத்தில் மெழுகு இருந்திருந்தால்..!!

    அப்ப கூட வரல..!

    Posted by Yellem Lm On Thursday, January 21, 2010 4 comments

    நான் அழும் போதெல்லாம் அத்தனை முறை
    கை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!

    நான் நடை பழகுவதிலிருந்து...
    உடை பழகும் வரை கை கொடுத்தார்  அப்பா... அப்ப கூட வரல..!

    தினம் நூறு பொய் சொல்லி
    நண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!

    ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..
    உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!

    இப்போ வந்திருச்சு...
    அடுத்து நான் இறங்கும் முன்
    அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!

    இப்போ என்னாச்சு எனக்கு...??
    சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!!



    நாளை வரை வரமாட்டாய்

    Posted by Yellem Lm On Thursday, January 21, 2010 1 comment

    தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
    ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே  நிற்கிறது..
    நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
    எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
    நாளை வரை வரமாட்டாய் எனும் போது...

    நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...

    நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
    நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் 
    மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...

    இருந்தும் வறட்சி..!

    Posted by Yellem Lm On Thursday, January 21, 2010 2 comments

    நல்ல மழை..!
    நல்ல விளைச்சல்..!
    இருந்தும் வறட்சி..!
    வஞ்சி..
    உன்னை
    வர்ணிக்க
    வார்த்தைகள்
    இல்லையே....!

    சனி, 17 நவம்பர், 2012

    மனிதர்கள் பல ரகம் (2)


    மனிதர்கள் பல ரகம் (2)


    கொடுக்கக் கொடுக்க
    கொடுத்துக் கொண்டே இருக்கச் சொல்லும் 
    கடுகளவும் சுயநலம் அற்ற தன்மை உடையவன் 
    மனிதருள் மாணிக்கம் அவனே வள்ளல் !.......

    கற்றது கை மண் அளவு 
    கல்லாதது உலகளவு என 
    இத் தத்துவம் அறிந்து 
    தளம்பாமல் இருப்பவனே சான்றோன்!!.....

    வென்றால் பெருமை 
    தோற்றால் வேதனை 
    அன்றும் இன்றும் என்றுமே 
    தட்டிக்கொடுத்து  வாழ வைப்பவன் நண்பன்!...

    அற்ப சுகத்தைத் துறந்து 
    பிறர் அகம் மகிழ வாழ்ந்து 
    நற்பணியே கெதியென 
    நானிலம் போற்ற வாழ்பவன் ஞானி !...

    அஞ்சாது மனம் கோணாது 
    கண்மூடி திறக்கும் முன்னே 
    தன்னைத் தந்தும்  பிற உயிர் 
    காகப் பிறந்தவ(ள் )ன் தியாகி !!!!.......

    வெள்ளி, 2 நவம்பர், 2012

    “பரு”வ வயதில்


    Wednesday, June 22, 2011

    “பரு”வ வயதில்



    என் பெண்ணிலவே..
    உன் தங்க நிற
    முகமெனும் மலரில்
    (ரு)னித்துளிகள்!

    ஹைக்கூ



    கூட்டாக சேர்ந்து
    புது வீடு கட்டினார்கள்
    யாரும்
    கண்டுகொள்ளவில்லை
    கரையான்கள்!

    மாற‌ வேண்டும்…


    நாளேடுகளில் இராசி பலன்
    பார்த்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.

    இந்தியாவில்
    ஊழல் அறவே ஒழிந்திட வேண்டும்.

    படித்தவர்களே அரசியலுக்கு
    வர வேண்டும்.

    மொல்ல‌மாரிக‌ளையெல்லாம் சாமியாராக்கி
    அவ‌ன் பாத‌ம் தொட்டு வ‌ண‌ங்குவ‌தை நிறுத்த‌ வேண்டும்.

    பண்பாட்டினை சிதைக்கும் படங்களை
    பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

    தொல்லைதரும் தொலைக்காட்சி தொடர்களை
    பார்ப்பதை நிறுத்த வேண்டும்.

    இளைர்கள், நடிகர்களை தலையில்
    தூக்கிவைத்தாடுவதை நிறுத்த வேண்டும்.

    கோடிகோடியாய் கொல்லையடிக்கும் அரசியல்வாதிக்கு
    கொடிபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

    பெண்கள் இரவு சமாச்சாரத்திற்கு மட்டும்தான்
    எனும் ஆணாதிக்கம் ஓழிய வேண்டும்.

    த‌மிழ் மொழியினை அழிந்திடாம‌ல்
    காத்திட‌ வேண்டும்.

    த‌மிழ‌னுக்கென்றொரு நாடு புதிதாய்
    உதித்திட‌ வேண்டும்.

    முரண்பாடு



    என்னவளே...
    நீ வரும் பாதையில்
    மலர்களை தூவினேன்!
    ஆனால்...?
    நீயோ... என் மீது
    மலர்களை தூவினாய்..
    ஆம்,
    என் கல்லறையில்!

    மறந்து போன மனித நேயம்


    கிராமத்தில்...
    கிழக்கு தெருவில் ஒருவன்
    மரமேறி தவறி கீழே விழுந்துவிட்டால்
    அடுத்த தெருவிலிருந்து
    அலரியடித்து ஓடிவந்து மருத்தவமனைக்கு
    அவனை அழைத்து
    சென்றதைக் கண்டு விய‌ந்ததில்லை.
    விச‌க் காய்ச்ச‌லில்
    ப‌டுத்த‌வ‌னை அண்டை வீட்டாரும்,
    முக‌ம் தெரியாத‌ ம‌னித‌ர்க‌ளும்
    ந‌ல‌ம் விசாரித்து
    சென்ற‌தைக் க‌ண்டு விய‌ந்ததில்லை!

    ந‌க‌ர‌த்தில்...
    இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌த்தில்
    சென்ற‌வ‌னை பேருந்து இடித்து செல்ல‌
    கீழே விழுந்த‌வ‌னுக்கு
    குருதி ஆறாய் பெருக்கெடுத்தோடி
    உயிர் ஊச‌லாட‌ கிட‌ப்ப‌வ‌னை
    அருகில் வந்து கூட‌ பார்க்க‌ ஆளில்லை
    என்ப‌தை க‌ண்டு விய‌ந்தேன்
    அவ‌ச‌ர உல‌க‌த்திலிருக்கும்
    ந‌க‌ர‌ ம‌க்க‌ளுக்கு
    ம‌னித‌நேய‌ம் மறந்து போனதென்று..!

    தமிழ் மாந்தரெல்லாம்...

    பொதிகையில் பிறந்தவளே
    மதுரையில் வளர்ந்தவளே
    ஐம்பெருங்காப்பியங்கள் படைத்தவளே
    திருவாசகமும் இராமாயணமும் கண்டவளே
    பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
    கலிங்கத்துப்பரணிக்கு சொந்தமானவளே
    இயல் இசை நாடக முத்தமிழே
    திராவிட மொழிகளின் தாயே
    தாய்மொழியாம் தமிழ் மொழியே
    தமிழனின் அடையாளமே
    உன்னை...
    திரைப்பட உரையாடல்
    தெருக்கடைகளின் பெயர்கள்
    கல்விக்கூடங்களில்
    நாகரிக மோகத்தால்
    ஆங்கில மொழியை
    தமிழ் மொழியுடன் கலந்து பேசி
    தமிழ் மொழியை மெல்ல சாகாடிக்குறோமே...
    நாமெல்லாம் தமிழர்தானா...?

    செம்மொழிக்கேன் இந்நிலை?

    தமிழர்களே...            
    நீங்கள் மும்முறை தமிழ்
    எனும் வார்த்தையை உச்சரித்து பாருங்கள்,
    உங்கள் உமிழ் நீரும்
    ஊற்றெடுக்க தொடங்கும்!
    ஆனால்...?
    இத்தகைய தாய் (தமிழ்) மொழியை
    தூய தமிழில்
    நாம் பேச தயங்குவதேன்?
    நாகரீகமென்று நினைத்து
    ஆங்கிலம் கலந்த தமிழை பேசி
    தமிழை (தாயை) கொல்கிறோம்!
    எத்தாயாவ‌து த‌ன் குழ‌ந்தைக்கு
    விசம் கலந்த‌ பாலினை கொடுப்பாளா?
    ஆம், இங்கே கொடுக்கிறாள்
    தாய் முத‌லில் குழ‌ந்தைக்கு
    சொல்லித்த‌ர‌ வேண்டிய‌ வார்த்தை
    அம்மா, அப்பாயென்று
    ஆனால்...இங்கே சொல்லித‌ருவ‌தோ
    ம‌ம்மி, டாடியென்று
    ஆங்கில‌மெனும் விச‌ப் பாலினை ஊட்டி
    ம‌கிழ்ச்சியும் அடைகிறார்கள்
    இன்றைய‌ பெற்றோர்க‌ள்.
    அய‌ல் மொழியை க‌ற்ப‌து த‌வ‌றில்லை
    ஆனால்..
    அன்னை மொழியிலேயே பேசிட‌ வேண்டும்.
    ப‌ழ‌மையான‌, தொன்மையான‌
    செம்மொழியே...
    உந்த‌ன் ம‌க‌த்துவ‌த்தினை
    என்ற‌றிவார்க‌ள்
    இந்த த‌மிழ‌ர்க‌ள்?
    எப்போத‌ழியும் ஆங்கில‌ மோக‌ம்?
    எப்போத‌ழைக்கும் த‌மிழ் தாக‌ம்?       

    செம்மொழிச் செந்த‌மிழ்


    உலக மொழிகள் மூவாயிரம்
    அதனில் முதற்மொழியாகிய தமிழ்மொழியே!

    குமரிக்கண்டத்தில் பிறந்த‌
    செம்மொழிச் செந்தமிழே!

    தமிழர்கள்தாம் உலகிற் தோன்றிய மாந்தர்கள்
    என்பதினை உலகினிற்கறிய வைத்த செம்மொழியே!

    உலகமொழிகளில் இயன்மொழிக்கென்று
    பதினாறு பண்புகளை கொண்டிருக்கும்
    செம்மொழிச் செந்தமிழே!

    திராவிட மொழிகட்கெல்லாம்
    தாய்மொழியாம் தமிழ்மொழியே!

    இயல், இசை, நாடகத் தமிழெனும்
    இலக்கிய முத்தமிழே!

    ஆரிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து
    சீரழியாது வந்த பைந்தமிழே!

    உனக்குப்பின் தோன்றிய மொழிகளெல்லாம்
    அழிந்துவரும் நிலையில்
    நீ மட்டும் உலகளவில் வளர்ந்துவரும் செந்தமிழே!

    முச்சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்ட‌
    தாய் மொழியாம் தமிழ் மொழியே!

    உந்தன் மகத்துவத்தினால் உலக மக்களை வியக்க வைத்த‌
    செம்மொழிச் செந்த‌மிழே! நீ வாழி!

    ச‌ரித்திர‌ம் ப‌டைப்போமா?


    கடலில் அலைகள்
    அமைதி கன்டதாய்
    சரித்திரம் இல்லை.
    தென்றலாய் வீசும்
    காற்று நின்றதாய்
    சரித்திரம் இல்லை.
    தேனுக்காக மலர்களை
    தேடிச்சென்ற தேனீக்கள் தோற்றதாய்
    சரித்திரம் இல்லை.
    ஆனால்...
    இளைஞர்களே நாம் மட்டும்
    உறக்கத்தில் உள்ளோம்,
    நாம் விழித்தெழுவது எப்போது?
    2020-ல் இந்தியா
    அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைந்து
    வல்லரசு நாடாகுமென்று கலாம் சொல்லியது
    இன்றைய இளைஞர்களின்
    மீது வைத்திருந்த நம்பிக்கையில்!
    கலாமின் க‌ன‌வை
    நாம்நினைவாக்குவ‌து எப்போது?
    இளைஞர்களே...
    விழித்தெழுங்க‌ள்
    2020-‍ம் ஆண்டினுள்
    நாம் புது ச‌ரித்திர‌ம் ப‌டைத்து
    க‌லாம் க‌ன‌வை நிறைவேற்றுவோம்
    இளைஞர்களே...
    ச‌ரித்திர‌ம் ப‌டைக்க‌ வாருங்க‌ள்...

    மரணமே என்னை விட்டுவிடு

    என் தூக்கத்தை துரத்தியவளே...
    உன்னை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடு 
    உன்னை நேசிக்க விடு 
    உன்னோடு வெளியே போகும் வாய்ப்பு கொடு 
    உன்னோடு பேச விடு 
    நாம் சிரித்து மகிழ்ந்திட சிறிது நேரம் கொடு 
    கைவிரல்களால் உன்னை வருட ஆனையிடு 
    க‌ண்ணத்தில் முத்த‌மிட‌ அனும‌தி கொடு 
    இத‌ழோடு இத‌ழ் இருக்க‌ விடு 
    உன் அழ‌கை ஆள‌ விடு 
    உன்னில் தொலைந்த‌ என்னை தேட‌ விடு 
    நீ என்னை விட்டு பிரிந்த‌ தின‌த்தில் தூக்கிலிடு 
    அவ‌ள் மடியின்மீது என்னை மாய்த்து விடு 
    அதுவ‌ரை...
    மரணமே என்னை விட்டுவிடு!

    பேரழகு தேவதையே...


    உந்தன் அழகினை பார்க்கும்
    அழகிய மலர்களும்  வெட்கி தலைகுனியுமடி

    உன் அழகை வர்ணித்து எழுத
    கவிஞர்களின் கூட்டம் கூடுமடி

    உன் அழகினை காணும் புயல் காற்றும்
    உன் மீது தென்றலாய் காற்று வீசி வரவேற்குமடி

    பேரழகியே... தயவு செய்து
    தலை குனிந்து பூமியை பார்த்துவிடாதே
    ஏனெனில்,
    உன் அழகினை பார்த்து வியக்கும்
    பூமியும் சுற்ற மறுக்குமடி

    உன் குர‌லை கேட்டால் குயிலும்
    உன்னிட‌ம் ம‌ன்னிப்புகோரும‌டி

    உன் மெல்லிய‌ உடை, அழ‌கிய‌ நடை
    ம‌ல‌ர்க‌ள் சூழ்ந்துள்ள ஜடை
    பார்ப்ப‌த‌ர்க்கு கிள‌ம்புமே ஆண்வ‌ர்க்க‌த்தின் ப‌டை
    அத‌ற்கு நீ த‌டை போடாத‌டி

    உன் கூந்த‌ல் இருளையும்
    வெள்ளும் க‌ருமையடி

    உன் ப‌ல் நில‌வையும்
    வெள்ளும் வெண்மைய‌டி

    தேவதையே... உன்னை முழுமையாய்
    பார்த்து ரசிப்பதர்க்கே ஓராண்டு வேண்டுமடி


    உன் சிரிப்பொன்றே
    நான் பல்லாண்டு வாழ‌ போதும‌டி.

    உந்த‌ன் மெளன‌த்திலும்
    ஆயிர‌ம் வார்த்தைக‌ள் உள்ள‌த‌டி

    பேர‌ழகு ப‌துமையே...
    நீ என‌க்கு மட்டும் சொந்த‌ம‌டி

    பேர‌ழ‌கு தேவ‌தையே...
    உன்னை காத‌லித்த‌
    என் க‌தி என்ன‌டி?

    நிறைவேறு(ம்)மா ஆசைகள்...


    அவளின் பாதங்கள் மண்ணில்
    படும்போது அந்த மண்ணாக
    நானிருக்க ஆசை...

    அவள் கால்களில்
    ஒலியெழுப்பும் கொலுசுகளாக‌
    நானிருக்க ஆசை...

    அவளின் மேனியை
    மறைக்கும் ஆடைகளாக‌
    நானிருக்க ஆசை...

    அவ‌ள் சுவாசிக்கும்
    காற்றாக‌
    நானிருக்க ஆசை...

    அவ‌ள் கூந்த‌லில் வைக்கும்
    ம‌ல‌ர்க‌ளாக‌
    நானிருக்க ஆசை...

    அவளின்‌ உற‌க்க‌த்தில் வ‌ரும்
    சொப்ப‌ன‌ங்க‌ளாக‌
    நானிருக்க ஆசை...

    இத்த‌னை ஆசைக‌ளும்
    என‌க்கு நிறைவேறு(ம்)மா...?

    காதலனே எனக்காக...


    தனித்திருக்கும்
    கன்னிமலர் மீது
    பனித்துளியாய் படர்ந்து விடு!

    அணிகலன்கள் அணிந்திருக்கும்
    அல்லி மலரை
    முகர்ந்திடு!

    காதல் புயல்
    மையம் கொன்டிருக்கும்
    இந்த மலரினை
    உன் இதயத்தில் குடியேர்த்திவிடு!

    மலரினும் மெல்லிய‌
    இந்த பெண் மலரினை
    கசங்கிடாமல் பார்த்து விடு!

    பூத்திருக்கும் புது மலரை
    வீட்டில் விற்பத‌ற்கு முன்
    உன்னுடைய‌தாய் ஆக்கிவிடு!

    கெஞ்சிக் கேட்கிறேன்
    இந்த பூவிதழில்
    தினமும் நூறு முத்தங்கள்
    கொடுத்து கொஞ்சிவிடு!

    இவைகளெல்லாம்
    செய்யும் முன்
    நீ என்னை திருமணம் செய்துவிடு!

    காதலெனும் தேர்வெழுதி....

    அன்பே...
    உன்னுடன்
    எனக்கொரு பரிட்சை
    உன் அழகும், அறிவும்
    என‌க்கு போட்டியாகுமோ?
    காதலென்று வருகையில்
    என்னை கவிழ்த்துவிடுமோ?

    இத்தனை நாட்கள்
    நட்புடன் உன்னோடு பழகியும்
    என் மனம்
    உன்னை தோழியாய்
    ஏற்க மறுக்கிறது.

    உன்னுடன் பேசுகையில்
    நான் சிரித்தாலும்
    எனக்குள் ஒரு
    காதல் தேர்வெழுதுகிறேன்
    நான் வெற்றி பெறுவதும்,
    தோல்வியடைவதும்
    உன் கையில்தான் உள்ளது.

    ஏனெனில்
    என்னுடைய விடைத்தாளை
    திருத்தி மதிப்பெண் போடும்
    பெண் நீதானே!

    என்னவளுக்காக இன்றிரவு மட்டும்…


    பௌர்ணமி நிலவே...
    இன்றிரவு மட்டும் உன் முக‌த்தை
    போர்வையால் மூடிக்கொன்டு
    இருட்டை கொடு.

    ப‌ற‌வைக‌ளே...
    இன்றிர‌வு மட்டும் கீச்சுக்குறளிடாதீர்க‌ள்
    குயில்க‌ளை அழைத்துவ‌ந்து
    குயிலிசை பாட‌ வையுங்க‌ள்.

    செல்லப் பிராணிகளே...
    இன்றிர‌வு மட்டும்
    யாரும் என்னவளை
    எழுப்பாமல் பார்த்துக்கொல்லுங்கள்.

    காற்றே...
    இன்றிர‌வு மட்டும் புய‌ல் காற்றாய் வீசாதே
    தென்றலாய் வீசி
    என்ன‌வ‌ள் மேனியை இத‌மாய் வ‌ருடிவிடு
    இன்றாவ‌து என்ன‌வள் இத‌மாய் உற‌ங்க‌ட்டும்

    என்னவளின் பிறந்த நாள்



    அக்டோபர் மாதத்தில்                   

    மலர்ந்த அழகு மலரே...


    மலர்ந்த
     மல்லியே
     
    நீ எப்போதுமிருக்க வேண்டும்
    வாடா மல்லியே...

    உனது பிறந்த நாளை
    நம் தேசத்தின்  திருவிழா நாளாக
    கொண்டாட வேண்டுமடி...

    ஒட்டுமொத்த உலக மலர்களின்
    உருவமே...

    உனது பிறந்த நாளை வரவேற்க
    உலக மலர்களனைத்தும்
    மலர காத்திருக்க வேண்டுமடி...

    தங்க நிறத்தவளே
    தங்கிட வேண்டுமடி மகிழ்ச்சிகள் உன்னோடு
    இப்பிறந்த நாள் முதல்!

    உன்னை காதலித்ததால்...


    அயல் மொழியையும்
    எளிதில் கற்றுக்கொன்டேன்.

    கலாச்சார உடையிலிருந்து
    நாகரீக உடைக்கு மாறினேன்.

    நம் காதலை கவிதை எழுதி
    கவிஞன் ஆனேன்.

    அலைபேசியை
    மணிக்கணக்கில் உபயோகித்தேன்.

    உன்னைப்பற்றீயே எப்போதும் மனதில்
    நினைத்துக் கொண்டிருந்தேன்.

    உன்னோடு சிரித்து பேசியே
    என் பொன்னான காலங்களை வீணடித்தேன்.

    உன்னுடைய வேலையையும்
    நானே பார்த்துக்கொண்டேன்.

    நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைவிட‌
    உன்னோடு இருக்க‌ விரும்பினேன்.

    உன்னோடு பிற‌ந்த‌ நாளுக்கு
    ப‌ரிசு வாங்க‌ தோழியை அழைத்து சென்றேன்.

    கார‌ணமே இல்லாம‌ல் ப‌ல‌முறை
    தின‌மும் தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டேன்.

    உன் ஆடையையும்
    அழகினையும் வ‌ர்ணித்து பேசினேன்.

    நீ கேட்காம‌லேயே நான் செய்த‌
    சேட்டைக‌ளை உன்னிட‌ம் கூறினேன்.

    இவையனைத்தும்
    உன்னை
    காதலிக்க தொடங்டகியதிலிருந்தே...

    உன்னை காதலிக்க தொடங்கியதிலிருந்து...


    அன்பே...
    உந்தன் பெயரினை
    எந்தன் பேனா முனையும்
    அழகாய் எழுதுகிறது!

    வ‌குப்ப‌றையில்
    என‌க்கு உற‌க்க‌ம் வ‌ரும்போது
    உன்னை நினைத்தால்
    என‌து உற‌க்க‌மும் க‌லைந்துவிடுகிற‌து!

    உந்த‌ன் முக‌த்தினை பார்ப்ப‌தற்க்கு
    ப‌ல‌முறை
    இருச‌க்க‌ர‌ வாக‌ன‌ங்க‌ளில் செல்கிறேன்
    உன‌து வீட்டு முன்பு!

    வ‌குப்ப‌றைக்குள் நுழையும்முன்
    உன் முக‌த்தினை பார்த்து சென்றால்
    அந்நாள் முழுவ‌தும்
    ம‌கிழ்ச்சியில் திளைக்கிறேன்!

    வ‌ண்டுகள் மல‌ர்க‌ளை சுற்றி சுற்றி வ‌ந்து
    தொடுவ‌தை பார்த்தால்
    நானும் உன்னை சுற்றி சுற்றி வ‌ந்து
    தொடுவ‌தாய் உண‌ர்கிறேன்!

    குள‌த்தில்லுள்ள
    செந்தாம‌ரை ம‌ல‌ர்க‌ளின் இத‌ழ்கள்
    உன் செவ்வித‌ழ் உத‌டுக‌ளை
    நினைவுப‌டுத்துகிற‌து!

    த‌லைசாய்ந்து நிற்கும் நெற்க‌திர்க‌ள்
    நீ, என்னுட‌ன் முத‌ன் முத‌லில்
    பேசிய‌போதிருந்த‌
    உன் முக‌பாவ‌னையை நினைவூட்டுகிற‌து!

    எனக்குள்
    ஏன் இந்த‌ மாற்ற‌ங்க‌ள்?
    இவைய‌னைத்தும்
    உன்னை காதலிக்க தொடங்கியதிலிருந்து...

    Tuesday, June 21, 2011

    அவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து…



    முன்பைவிட என்னை அலங்கரித்துக்கொள்வதில்
    அதிக நேரம் செலவாகிறது.

    புத்தாடைகள் வாங்கும்போது
    இது அவனுக்கு பிடிக்குமாயென மனம் நினைக்கிறது.

    வகுப்ப‌றையில் ஆசிரியர் பாட‌ம்
    ந‌ட‌த்தும்போது காதில் விழுவ‌து
    அவ‌ன் என்னோடு  பேசிய‌து ம‌ட்டுமே.

    வாச‌னை திர‌விய‌ங்க‌ள் வாங்குவ‌திலேயே
    என் காசு க‌ரைகிறது.

    அவ‌னை நேரில் ச‌ந்தித்து பேசிய‌து ப‌ர்த்தாம‌ல்
    அலைபேசியிலும் தொட‌ர்கிறது.

    அவ‌னுக்கு பிடித்த‌ விளையாட்டில்
    என‌க்கும் ஈடுபாடு வ‌ருகிற‌து.

    நான் வெளியே எங்குசென்றாலும்
    அவ‌ன் வ‌ந்திருக்கிருக்கானா? யென
    க‌ண்க‌ள் அவனை தேடுகிற‌து.

    நான் த‌னியே இருக்கும்போது
    அவ‌னோடு இன்று என்ன‌ பேச‌லாமென
    நினைக்க‌ தோன்றுகிற‌து.

    அவ‌ன் ம‌டி மீது த‌லைவைத்து
    சிரித்து பேசிட‌ துடிக்கிறதென் ம‌ன‌ம்.

    என்னை அவ‌ன் த‌னியே திரைப்ப‌ட‌த்திற்கு
    அழைப்பானா? யென‌ ம‌ன‌ம் ஏங்குகிறது.

    திரும‌ண‌மே வேண்டாமென்ற‌வ‌ளுக்கு
    திரும‌ண‌த்தின்மீது ஆசை வ‌ருகிறது.

    இவைய‌னைத்தும்
    அவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து...