Listen 3D Quality

திங்கள், 16 ஏப்ரல், 2012

என்ன செய்யலாம் இந்த உலகை...?


என்ன செய்யலாம் இந்த உலகை...?



ம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு 
மழுங்காமல் இருக்கிறது..!

விதிவசம் அகப்பட்டு
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
 
விடியும் ஒவ்வொறு நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!

ம்பித்தான் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...

ற்போது 
வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத 
குருவி ஒன்று...!


November 1, 2011

இதை என்னவென்று நான் சொல்ல...!



தென்றல்காற்று வீசும்
மாலைப் பொழுது...!
 
ந்திவானம் 
தங்க நிறத்தில்..!

காக்கைகள் படபடத்தது
கூட்டை நோக்கி...!

மாலை நேரப்பூக்கள்
மலர்ந்த மயக்கத்தில்...!

விழியோரம் தீபம் ஏற்றி
உலா வந்தது மின்மினி...!

மூன்றாம் பிறையாய்
முகம் காட்டி சிரித்தது நிலா...!

கரந்த சேர்க்கையை முடித்துவிட்டு
கூட்டுக்கு திரும்புகிறது வண்ணத்துப்பூச்சி...!

சூரியனை வணங்கி முடித்து
தலை தாழ்கிறது நெற்கதிர்..!

காற்றைக்கிழித்துக்கொண்டு
தடக்.. தடக்.. சத்தத்துடன் புகைவண்டி...!

மாலைப் பொழுதை தழுவிக்கொள்ள
மடைத்திறக்கிறது இருட்டு...!

தினம் தினம் இப்படித்தான்
மாலை பொழுதுகள்...!

னால் எனக்கோ..?

நேற்று சுடுச்சோறு..!
இன்று பழையது...!
நாளை...?


தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே...!

October 9, 2011

இது என் அன்புள்ள எதிரிகளுக்கு...


துவரை நண்பர்களுக்கே
வாழ்த்துப்பாக்கள் பாடிய என் நா...

தோழர்களோடு மட்டுமே ‌தோழமைப்பாராட்டி
சிறகு முளைத்த என் தூரிகைகள்...

முதன் முதலாய்...
என் எதிரிகளுக்கும்
வண்ணம் பூசிஅழகுபார்க்க துடிக்கிறது..

ன் அன்புள்ள எதிரியே..
தற்போது
உன் வாழ்க்கைப்பதிவை பார்த்துதான்
என் படிக்கட்டுகள் பயணப்படுகிறது..

நீ வெற்றிக்கனியை பறிக்கும்போதெல்லாம்
என் தோல்விகள் துரத்துகிறது
எப்படியாவது அதை அடைந்து விட...

நீ கொண்டுள்ள வேகத்தை
குறைத்துக் கொள்ளாதே...
உன் வேகம் தான்
என் தற்காப்புக்கு என்னை தயார்படுத்துகிறது...

ன் வேகம் தான்
அதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
‌அதிகமாய் போராடவும்
எனக்கு கற்றுக் கொடுக்கிறது...

ன் மீசைகளில்
சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!

ன் உயிர் அணுக்கள்
ஓய்வை தவிர்த்து உறுதிபடவும்..!
என் எதிரியே நீ மட்டும்தான் காரணம்

காயப்படுத்தியும்.. காயப்பட்டும்...
மீண்டுவிடுகிறேன்
உன் பயணமும் உன் வளர்ச்சியும்
என்னை தூங்கவிடுவதில்லை...!

ன்னோடு போரிட 
நீ எடுத்த ஆயுதம் உழைப்பு..!
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை....

ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..

 

துவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...

தற்போது வருகைப்புரிந்த
என் அத்தனை அன்புள்ள .........களுக்கும்
என் நன்றிகள்...


October 6, 2011

இதை விடவா மனிதன் உயர்ந்தவன்...!



ரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...

ஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....

நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...




ரு பாறையின் மூச்சு....

ஓ.. மனிதா...
நீ வலிகளால் கோழையாகிறாய்....

நான் வலிகளால்
கடவுளாகிறேன்...




ரு பனித்துளியின் சுவாசம்..

ஒ.. மனிதா.. 
நீ நீரில் மூழ்கையில் 
மூர்ச்சையாகிறாய்...

நான் மூச்சடக்கி 
முத்தாகி‌றேன்....


 தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

August 9, 2011

சுயமரியாதையை விட்டு வாழ்வதா..?


காலையில் 
பூக்களைப்போல் மலர்கிறேன்...!
மாலைக்குள் மனித சூரியன்களால்
மரணிப்போம் ‌என்று தெரிந்தும்.... 

சிகரங்களில் விழுந்தாலும்
அடிவாரத்தை நோக்கி பாயும் மழைபோல
மேல் நோக்கி எழும்போதெல்லாம் 
சூழ்ச்சியால் வீழ்த்தப்படுகிறேன்....

வானம் நோக்கி சிறகு விரிக்கையில்
கால்களுக்கு சங்கிலிபிணைப்பு...

காலத்தோடு போர்கொடி ஏந்தி
காத்திருக்கிறேன் என்விடியலுக்காக...

லகத்திற்கு என்னதெரியும்
பாறைக்குள் முளைத்திட்டு
நீருக்காக அலையும் 
என்வேர்களைப்பற்றி... 

சுயமரியாதையை விட்டுவிட்டு
இங்கு யாருக்கும் தலைவணங்க
இடம் கொடுக்கவில்லை 
என் உயிரணுக்கள்....

காலத்திற்கும் இடத்திற்கும்
நேரத்திற்கும் ஏற்றார்போல்
வண்ணம் ‌கொண்டு மாறிக்ககொள்ள
நான் ஒன்றும் பச்சோந்தியல்ல...

னிமையை சுவாசித்து
மௌனம் கொண்டு சாதிக்கிறேன்...
வெட்டும்போதும் கூட 
எதிர்ப்பு காட்டாமலிருக்கும்
மரத்தினைப்போல...

நாளை துளிர் விடலாம்
என்ற நம்பிக்கையில்...!


நல்ல பதிவுகளுக்கு 

கருத்திட்டு வாக்களித்து கௌரவப்படுத்துங்கள்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

July 25, 2011

பெண்மையே உன்னை என்னவென்று சொல்வது..?




ஆண்கள் உடல்ரீதியாக பலசாலியாக இருந்தாலும் அவர்களை விட பெண்கள்தான் பன்முக திறமை படைத்தவர்கள் என்று உளவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இல்லத்தை கவனிப்பதில் தொடங்கி, கணவன், குழந்தைகளுக்கு தேவையான பணிவிடைகள் செய்வது வரை அவர்களின் திறமைகள் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பாக வெளிப்படுகிறது.

அன்புக்குரியவர்கள் பெண்கள்

ஆண்கள் சுயநலவாதிகள். அவர்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் கூறிவிட்டு மறந்துவிடுவார்கள்.

பெண்களின் பன்முகத்திறன்

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப் படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.

மனதிருப்தி

ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்… இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

வெளிப்படையான பேச்சு

பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசை களையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்’. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். – சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கான வர்களாகவும் இருப்பார்கள்.

ஆண் பெண் என்ற வித்தியாசம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் நாளை நம்பிக்கைகள் அவர்களே என்று நம்புவோம்.

July 22, 2011

இப்படியெல்லாம் SMS வந்தா என்ன பண்றது...?


வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

**********************************************************
விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!
\
**********************************************************

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?

ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!

********************************************************** 
ண்ணில் ஒரு மின்னல்...
முகத்தில் ஒரு சிரிப்பு...
சிரிப்பில் ஒரு பாசம்...
பாசத்தில் ஒரு நேசம்...
நேசத்தில் ஒரு இதயம்...
அந்த இதயத்தில்
என் இனிய நண்பன் நீ...

**********************************************************

ண்ணீர் எனக்கு பிடிக்கும்
அ‌து எனக்கு கவலை இருக்கும் வரை...
இரவுகள் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாய் பிடிக்கும்...

உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அது என் உயிர் பிரியும் வரை...!

********************************************************* 
இந்த நட்புக் கவிதைகள் என் கைபேசியில் 
குறுந்தகவல்களாக வந்தவைகள்...
இவைகள் யாருக்கு சொந்தமென்று எனக்கு தெரியாது...


தீயில் குளித்தாலும் 

சாம்பல்தட்டி எழும் பீனிக்ஸ் போன்று 
என்றும் உயிர் வாழ்பவைகள் இவைகள்...

ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..! 

July 3, 2011

நான் எதுவாக விழ வேண்டும்..

ரிசல் காட்டில் விழுந்தேன்
தானியமாக முளைத்தேன்....
பூக்களின் இதழ்களில் விழுந்தேன்
நறுமணமாய் முளைத்தேன்...
 
 
டல் ‌ஆழத்தில் விழுந்தேன்
முத்துக்களாய் முளைத்தேன்...


 குயிலுக்குள் கருமையாய் விழுந்தேன்
ராகமாய் முளைத்தேன்...


செம்மொழி தமிழுக்குள் விழுந்தேன்
கவிதையாய் முளைத்தேன்...
 
துவாக விழுந்தால்
மனிதனாய் பிறப்பேன்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக