Listen 3D Quality

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

மறக்க மறுக்கும் நினைவுகள்


மறக்க மறுக்கும் நினைவுகள்...!! (Panithulishankar kavithaigal)

7


உன் இதயம் சுட்டவளை
இமைக்குமுன் மறந்துவிடு !
ஆனால் உன் இதயம் தொட்ட வளை
இறக்கும் வரை மறக்காதே ! 
* * * * * * *
நினைவுகள்...!!

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!

நீ துன்பத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!
* * * * * * * 
- நேசமுடன் 
பனித்துளி சங்கர் -
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் தமிழ் கவிதைகள், Tamil Kavithaigal SMS Love poem Panithuli shankar 2012

15

மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் காதல் கவிதை - Kadhal Kavithai / Love Poem - முகவரி மரணம்

9



பெயர் தெரியாத தெருக்களில்
யாருமற்ற சாலைகளில் 
இன்னும் என்னுள் மீதம் இருக்கும்
அவளின் நினைவுகளுடன் 
சுற்றித் திரிகிறேன் 
மரணத்தின் முகவரி தேடி .....                               

                             . 
                                                -பனித்துளி சங்கர் 




மேலும் வாசிக்க.. >>

2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிதைகள் - பனித்துளி சங்கர் 2012 new years kavithaigal

7


தயம் ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் இறுதி நாள் இன்று .
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !
னவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!

சைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!

னி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!

துநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.

ல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை !
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!

நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!

ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் !.

இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!

திர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.

நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.

நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .

புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!



திவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய ADVANCE புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!


இது கடந்த வருடத்திற்கு நான் எழுதிய மீள் கவிதை


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>

நம்பிக்கை கவிதைகள் - வாழ்வின் ருசி - பனித்துளிசங்கர் Nambikkai kavithaigal in tamil

22



நாற்பது வயதில் சாய்வு நாற்காலி தேடும் 
இந்த காலத்தில்
எழுபது வயதில் 
உழைக்கவேண்டி உதிரம் துடிக்கிறது . 
விற்கக் கூடுமா பலகாரம் என்று எண்ணுவதை விட 
விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் 
வயிற்றுப் பசியிலும் ,
வாழ்க்கையின் ருசியிலும் ஊறிப்போனது. 
வகை வகையாய் பலகாரங்கள் விற்றாலும் 
தினமும் இந்த ஒரிச்சான் வயிறு பசிபோக்க 
கொஞ்சோண்டு கஞ்சிதான் 
நாளையும் இந்த தேகம் உழைக்க ஊன்றுகோல் ! 
                                                         
-பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

காதல் புன்னகை - Kadhal Kavithaigal - பனித்துளி சங்கர் -Tamil Haiku SMS காதல் கவிதைகள் Panithuli shankar

24



ரு பூகம்பம்


வந்து சென்ற தடமும் ,

உன் சிறு புன்னகை

தந்து சென்ற உணர்வும்

ஒன்றாய் உள்ளத்தில் !


                        -பனித்துளி சங்கர் 
மேலும் வாசிக்க.. >>

இதயத்தின் ஓசைகள் - காதல் கவிதைகள் - Panithuli shankar Kadhal kavithaigal

25



டலோடு உயிர்
வருவது காதலா !?
உயிரோடு உடன் வருது காதலா..!
உடல் விற்றேன் மனந்தவளிடம்
இதயம் விற்றேன் என்னை உணர்ந்தளிடம்.....!

ன் அறிமுகத்தின்
முதல் நாள் மீண்டும் ஒரு குழந்தையாய்
இந்த உலகம் மறக்க செய்தாய்....
உந்தன் சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
இன்னும் சிறிது நீளாத
இந்த கணங்கள் என்ற ஏக்கம்
இப்போதும் இதயத்தில் பசுமையாய் !

நீண்ட உரையாடல்களுக்கு இடையினில்
உன் வார்த்தைகள் இல்லாத மவுனத்தில்
பல முறை
அர்த்தம் தேடி தொலைந்து போயிருக்கிறேன் .!

ன் மடி சாய்ந்து உறங்கிப்போன
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
என் வாழ்வில் நான் பெற்ற
மிகப்பெரிய பொக்கிஷம் என்றாகிப்போனது . !

ன் தனிமைகளின் ஒவ்வொரு
இரவுகளும் உன் ஞாபகங்களின்
எல்லைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறது . !

சிறு எறும்பு கடித்து
துடித்துப் போகும் குழந்தை ஒன்றின்
அழுகை சத்தமும்
உன் நினைவுகள் சுமந்து
ரணப்படும் என் இதய சத்தமும்
இப்பொழுதெல்லாம் ஒன்றாகிபோகிறது .!

ன்னுடன் உரையாடி
இந்த உலகம் மறந்த நிமிடங்கள் .
இப்பொழுதெல்லாம் உன் நினைவுகள் சுமந்து
இறந்துபோகத் துடிக்கிறது .!

காதல் செய்வதும்
பிரிந்து அழுவதும்
வாடிக்கையாகிப் போன இந்த உலகத்தில்
நமது கண்ணீரும் இன்னும் சில நாட்களே !.....

-பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>

மரம் தின்ற மனிதர்கள் - பனித்துளி சங்கர் கவிதைகள் - Maram thinra manithargal Kavithaigal

29

ளமையும் இல்லை
இலைகளும் இல்லை
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ
.ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனி வரும்
அவன் தாகம் தீர்ப்பானோ....!????

னிதன் மகிழ்ந்து வாழ
அனைத்தும் தந்த மரங்களுக்கு
மனிதன் தந்த
பரிசு மரண தண்டனை..!

வெட்டப்படும் மரங்களின்
அழுகை சத்தம்
உயிர் வரை பாய்கிறது.....
தரைகளில் காய்ந்து கிடக்கும்
ஒவ்வொரு இலை சருகிலும்
காய்ந்து போன
குருதி வாசம் நாசி எட்டுகிறது.....

த்தனை பறவைகளின்
வீடுகள் சிதைத்தோம்....
எத்தனை பறவைக் குழந்தைகளின்
தாய்பால் பறித்தோம்......

வித விதமாய்
தினம் தினம் புதிது புதிதாய்
சிரித்த எத்தனை பூக்களின்
புன்னகைகளில்
பூகம்பம் விதைத்தோம்....

விதை ஊன்றி
உயிர் கொடுக்க வேண்டிய
மரங்களுக்கு
விதவை பட்டம் கொடுத்து
உடனே பாடையில் ஏற்றும்
பெருமை இந்த மகத்தான
மனித குலத்திற்கு மட்டுமே
உரிய சிறப்போ...!?
நாம் பூகம்பம் கண்டால்
வலி என்கிறோம்
பூக்கள் காயம் கண்டால்
அதன் விதி என்கிறோம்......
சிந்திக்கவும் பேசவும் தெரிந்த
மனூட அரக்கர்களுக்கே உரிய
சுயநலம்தான் இந்த மரக்கொலைகளோ...!?

சிறு நரை முடி உதிர்ந்தாலே
ஆயிரம் மருத்துவம் தேடும் நாம்.....
தினம் மரங்களின்
உடல்களை அறுப்பது ஏன்...!?

நேற்று என் முன்னோர்
நட்ட மரங்கள்
இன்றும் நாங்கள் வாழ
சுவாசம் தருகிறது....
நாளை வரும்
என் தலைமுறை சுவாசிக்க
எந்த கடைகளில் சுவாசம் வேண்டி
காத்துக் கிடப்பார்களோ....!?

ண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உள்ளுக்குள் நொறுங்கிப்
போகிறது இதயம் !.
* * * * * * *
- பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>

பசி கவிதைகள் > சிதறும் உயிர்கள் - Panithuli shankar varumai kavithaigal in tamil

24


ணவுகள் எங்கே


 எங்களின் உயிர்களும் அங்கே.
உடை இன்றி பிறந்தோம்
 ஏனோ இந்த உடலின்றி பிறக்க மறந்தோம்..!?

 அழியாத இந்த மண்ணைக்
கட்டியாளத் துடிக்கும் மானுடன்
 ஏனோ நாளை அழியப்போகும்  
  மனிதனை மறந்துபோனான்..!

தேடிக் கிடைபதற்கும்,
உழைத்து உண்பதற்கும்
ஏதும் இல்லாத தூரங்கள்
பார்வைகளில் நிழலாடுகிறது.
  சின்னஞ் சிறு குழந்தையில்
சிறுநீர் கழித்து வாழ்ந்த
என் மக்கள் இன்று கண்முன்
சிறுநீர் குடித்து தாகம் தீர்ப்பதா...!?

பற்றி எரியும் பசியில்
கொன்று உண்பதற்கு என்னை போன்ற
பசிகொண்ட மனிதனைத் தவிர
எதிரே ஒன்றும் இல்லை..!

உணவும்
, உடையும், இருப்பிடமும்தான்,
எங்களின் கனவாகிப் போனது
இந்த மரணம் கூடவா
எங்களின் வாழ்வில்
கானல் நீராகிப்போனது !?

கை நீட்டி கண்ணீர் விடுவதற்கும் ,
வாய் திறந்து கதறி அழுவதற்கும்
உணர்வுகள் இருந்தும்
உடலில் உதிரம் இல்லை.

பசி  எடுக்க மருந்தொன்றுக்
கண்டான் மனிதன்
நாங்கள் பசி மறக்க ஏனோ
மருந்தொன்று காணாமல் மறந்தான்..!!

நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சில நாட்கள்
இந்த பூமியில் சுவாசித்திருக்கும். .!  

உண்ண உணவின்றி மறித்துபோகும் 
இந்த உன்னத வரம் எங்களுடன்
அழிந்துபோகட்டும்.
இயன்றவரை உணவுகளை வீணாக்காதீர்கள்...!!
  
          
                                           - பனித்துளி சங்கர் 



மேலும் வாசிக்க.. >>

நீ வானம் நான் பூமி - காதல் கவிதைகள் - Tamil New Kadhal kavithaigal panithuli shankar

14


ழை பொழியும் பொழுதெல்லாம்
நீ தந்த 
முதல் முத்தம் ஞாபகம் .!
இடி சத்தம் கேட்கையில்
 எப்போதும் இசையாகும்
 உன் வெட்கம் !
 முடிவாய் மின்னலென 
நீ வீசிய பார்வையில் 
அடிவானம் கறுத்து 
அடைமழை பொழிய
வானம் பார்த்த பூமி 
இன்று வயது மீட்டு 
சிரிக்கிறது காதல் கொண்ட
 வெட்கத்தில் !..    
     
        -பனித்துளிசங்கர் 
மேலும் வாசிக்க.. >>

ஞாபகத் தூறல் - காதல் கவிதைகள் > Panithuli shankar Tamil New Kadhal Kavithaigal

19


கொட்டும் மழைக்குள்
ஒற்றைக் குடைக்குள்
ஓயாத அடை மழையென
உன் நினைவுகள்..!

சுற்றும் பூமி நிற்கும்போதும்
மறக்காத சுவாசமாய்
உன் ஸ்பரிசம்..!

மழை நின்று போனது
நீயும் நானும்
பிரிந்துசெல்ல மனமின்றி
பிரிந்து சென்றோம்.!.

காலங்கள் கடிவாளங்கள் இல்லாத
குதிரையாய் கால் போகும்
திசை எங்கும் ஓடிப்போனது..!

ஒரே மூச்சில் வாசித்து முடிக்கப்பட்ட
புத்தகத்தின் பக்கங்களாய்
பத்து ஆண்டுகள்
சத்தமின்றி கழிந்து போனது..!
இன்னும் இளமை மாறாமல்
அதே புன்னகையோடு எப்பொழுதும்
தலையசைக்கும் மரங்கள்..!

மண்ணைக் கட்டிக்கொண்டு
இன்னும் நமக்காய்
காத்துக் கிடக்கும் உறவுகளாய்
பார்க்கும் திசை எங்கும்
பச்சை நிறத்தில் புற்கள்..!

இன்னும் பழமை மாறாமல்
அதே பொலிவுடன் அந்த இடம் .
இதோ அதே மழை
அதே ஒற்றைக் குடை
ஆனால் நீ அருகில் இல்லை..!

வெகு நேரம் காத்துக் கிடந்தேன்
நீ வரவில்லை .
அன்று உன்னையும் என்னையும்
ஒன்றாய் நனைத்த
இந்த மழையில் இன்று நான் மட்டும்
தனிமையில் நனைகிறேன்...!

உன் நினைவுகளுடன்
நான் கடந்து செல்லும்
ஒவ்வொரு இடங்களிலும்
மழை நின்றபின்னும்
தூறிக்கொண்டிருக்கிறது
உன் ஞாபகங்கள் மட்டும்..!


                            - பனித்துளிசங்கர்
 

மேலும் வாசிக்க.. >>

காதல் துளிர் - முடிவில்லா காதல் கவிதை விழா - Panithuli shankar Tamil SMS kadhal kavithaigal 2011

14

"உலகத்தில் விரும்பப்படாதவர்கள்
அதிகம் இருக்கலாம்
ஆனால்
விருப்பம் இல்லாதவர்கள்
யாரும் இல்லை" !
வாழ்க்கைதான் சுருங்கிப் போகிறதேத் தவிர
ஆசைகள் எப்போதும் வளர்பிறைதான் .
வயது நிரம்பி ,
தோள்கள் சுருங்கி ,
உடல்கள் மெலிந்து ,
தலை முடிகள் நரைத்துபோயினும் ,
எங்கேனும் தொற்றிக்கொள்ளும்
காட்சிகளில் மீண்டும்
பற்றிகொள்கிறது இந்த அழியாத காதல் "

                                            - பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

இதழ்கள் யுத்தம் - தமிழ் காதல் கவிதைகள், Tamil Kadhal Kavithaigal Panithuli shankar

6

ரண்டுக் குடைக்குள்
ஒற்றை முத்தம் !..
இதயம் இரண்டில்
ஒன்றாய் யுத்தம் !..
இதழ்கள் இரண்டில்
புதிதாய் சத்தம் !.
இன்னும் நீளும்
இந்த காதல் பித்தம் !....

                        - பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

New காதல் கவிதைகள் - நிலா காதல் - Panithuli shankar kadhal kavithaigal in tamil

19


தெரியும் என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியாது என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியவில்லை..!
நடு நிசியில்,
நிசப்த ஓசையில்
தனித்து தவிக்கிறது நிலவொன்று
”நீ” இல்லாத
”என்னை” போலவே..!!

                                    - பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

தமிழ்க் காதல் கவிதைகள் > கடற்கரை ஞாபகங்கள் - Panithuli shankar kadhal kavithai - Love SMS Poem

12


ணல் சுமக்கும் கடற்கரை ,
இந்த கன்னம் சுமக்கும் கை விரல் , .
நித்தம் உன் நினைவுகள் சுமக்கும்
இதயம் என மெல்ல நீள்கிறது
இந்த கடற்கரை காட்சிகள்
இன்னும் என்னுள்
கரை தொடாத அலைகளென
கனக்கிறது கைரேகை முழுவதும்
அழியாத உன் ஞாபகங்கள் !...
 
                                -பனித்துளி சங்கர்
 


..!




மேலும் வாசிக்க.. >>

குட்டிக் காதல் கவிதை > எரிமலை >Panithuli shankar kutti kavithai in tamil

10

ரிமலையென
 தினம் தினம்
வெடிக்கிறது மனது !

அதை தலையில்
கொட்டி கொட்டி
மூடி வைக்கிறது
உன் நினைவு .

                       
                                -  பனித்துளிசங்கர்


மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதை - ஞாபகச் சுமை - Panithuli shankar Tamil Kadhal Kavithaigal - 14 July 2011

11




சில நேரம்
உடைபட்டுப் போகிறேன்.
சில நேரம்
தடைபட்டுப் போகிறேன்
உன் பார்வை என் மீது விழும் போது...!

ல வருடங்கள்
 உனக்கானக் காத்திருப்பின் சுகத்தை
 நீ என்னைக் கடந்து செல்லும்
அந்த சில நொடிகளில் உணர்கிறேன்...!

டை மழை காலத்திலும்
 அனலாய் கொதிக்கிறது தனிமை.
இந்த உலகம் பெரியது
என்பதை மறந்து பல முறை
 நீ விட்டு சென்ற கால்தடங்களுக்கு
 காவல் இருக்கிறேன்...!

ரு கைக்குழந்தையின்
தேடலாய்  எப்போதும்
உன் முகம் கண்டு மட்டுமே
 புன்னகைக்கிறேன்..!

தினம் தினம்
கருப்பாகிப் போகும் இரவுக்குள்ளும்
உன் நினைவுகள்
 நான் சுமப்பதால்  எப்பொழுதும்
பகலாகவே நீள்கிறது
எனக்கான உலகம்.... !!!

                                                                           -- பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள்

12





னத்துப்போன
நினைவுகளின் உச்சமாய்
கடற்கரை எங்கும்
 காத்துக் கிடக்கிறேன் .

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது ஆனால்
உன் பார்வைகள் பதிந்த
நான் மட்டும்தான் இன்னும்
உனக்காகக் காத்துகிடக்கிறேன் ..!

னவுகளின் கரையோரம்
கடல் அலைகலேன ஓயாமல்
வந்து வந்து செல்கிறது
 உன் ஞாபகங்கள் ..!

டைந்து போவதற்கும்
உடைத்துப் பார்ப்பதற்கும்
விளையாட்டுப் பொருளென
மாறிப்போனதோ இந்த இதயம்....!?

ழ நினைத்தும்
கண்ணீர் இல்லாத விழிகள்..!
உளற நினைத்தும்
வார்த்தைகள் இல்லாத உதடுகள்..!
இறந்துபோக நினைத்தும் இன்னும்
உன்னை மறக்காத  இதயம்  என
 ஒவ்வொரு நொடியும்
போலியாய் கசிகிறது
உன் நினைவுகளில்....!!!
                        
                          - ❤ பனித்துளிசங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

ஒப்பாரி - பனித்துளிசங்கர் கவிதைகள் / Panithuli shankar vazhkai Tamil soga kavithai

15

முரண்பாடுகள் நிறைந்த
இந்த வாழ்க்கையில் 
அவ்வப்போது எங்கேனும்
முகம் காட்டும் மரணங்களில்
 இன்னும் நீள்கிறது
இது போன்ற ஒப்பாரிகள் !...

                                   -பனித்துளிசங்கர்
மேலும் வாசிக்க.. >>

கண்ணீர் ஊற்றுகள் - பனித்துளிசங்கர் / Panithulishankar Tamil Kavithaigal 27 May 2011

15

றக்கங்கள் பறிக்கப்படும்
ஒவ்வொரு நடு நிசிகளிலும்
உள் வாங்கும் சுவாசத்துடன்
ஒட்டிக் கொ (ல் )ள்கிறது
 ஒரு மரணப் பயம் !

மீதம் இருக்கும் வாழ்க்கை
எதற்கென்றேப் புரியாத
 பூகம்பமாய் இதயம் தாண்டி
வெடிக்கப் பார்க்கிறது !

மை மூமூடித் திறப்பதற்குள்
மீண்டும் ஒரு உறவின்
உயிர் பிரியும் சத்தம்
என் செவிகளை
துளைத்துக் கொண்டிருக்கிறது .!
 
சொல்லி அழ இயலாத மரணங்கள்.,
விம்மி விம்மி வெளிவரும்
கண்ணீர்த் துளிகள் .,
விரும்பி ஏற்காத உடல் சுகம் .,
தூண்டிலில் மாட்டிய மீனாய்
துன்புறுத்தலின் உச்சத்தில்
மீண்டும் மீள்கிறது
கற்பையும் , உறவையும்
ஒன்றாய்  இழந்த கணங்கள் !....

                              -பனித்துளிசங்கர் 

4 கருத்துகள்:

  1. வணக்கம் அப்பாக்குட்டி என்ன இது எதுக்காக எனது படைப்புகளை எல்லாம் மீண்டும் இப்படி இங்கே பதிவிடுகிறீர்கள் !???? தவறாக கேக்கவில்லை சும்மாக் கேக்கிறேன் எனது பெயருடன் வெளியிட்டு இருப்பதால் தப்பில்லை .

    பதிலளிநீக்கு
  2. Unkalathu kavithaikal tholainthu pona japakankalai meeddy tharukinrathu.nanri

    பதிலளிநீக்கு
  3. மேலும் இதுபோன்ற கவிதை வரிகளை படிக்க 👇

    alone quotes in tamil

    பதிலளிநீக்கு